Wednesday, May 7, 2014

குறுக்கெழுத்து புதிர் - 4

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/


அன்பு நண்பர்களே,
இதோ எனது நான்காவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.



குறுக்காக:
1.தந்தை போல் கலக்கத்தில் பக்கத்தில் இருக்காதே(4,1)
4.உலகம் சிங்கப்பூரின் தலையுடன் சேர்ந்ததால் பாரசீகமாக சுருங்கியது. (3)
6.பாசம் சிதைந்ததில் கிடைத்த நான்கு விரலளவு (3)
7.காமு சாவித்திரி இணைந்து விதியிழந்து கலந்ததால் லட்சணம் (5)
8.சிங்கத்துள் கத்தி தலை நீங்கி நுழைந்ததால் கோவேறு கழுதை (4)
9.வாலில்லா கிளி வகையுடன் சேர்ந்து வீடு (4)
12.கையில் பீம்சிங்கின் முதல் பாதியை திருப்பிப் போட்டால் மிடுக்கு (5)
14.மதிப்பிற்குரிய குகனின் தலை இணைந்து முறுக்கு (3)
16.ஆதியிழந்த அதர்மா கலங்கியதில் பெண்கள் (3)
17.ஆரம்பமில்லா கிழடு வயிற்றுடன் சேர்ந்து கலந்து கலங்கிடு. (5)

நெடுக்காக:
1.முடியாத கோட்டையுடன் ஒரு ஸ்வரம் சேர்ந்து முடியாத மன்னன் (3)
2.சித்தி தலையெடுத்து குழந்தையுடன் சேர்ந்து அய்யராத்துப்பெண் (5)
3.போ சாமிலி கலங்கியதில் பொய்க்கடவுள் (4)
4.அம்பாரத்தில் பாதி உயரிய விருது (3)
5.கங்கா தலையெடுத்து தலையினுள் போட்டதால் ஒப்பனை (5)
8.பெரியவள் காலிழந்து சமயத்துடன் சேர்ந்து அந்த நேரமா? (5)
10.யத்தனம் தயவில்லாமல் பேரழகியுடன் சேர்ந்து கலந்ததால் மாமணி (5)
11.முடிவில்லா அம்பாள் குமரன் தலை சேர்த்து அஸ்திரமாகு (4)
13.பீர்பால் தலைமையில் தேசமில்லா தர்பார் சீனர் (3)
15.குன்றின் தலை குளத்துடன் இணைந்து கன்னம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments:

Post a Comment